முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 168. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 168. பாலை - தலைவன் கூற்று
(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண் ணியளே நன்மா மேனி புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் |
5 |
மணத்தலுந் தணத்தலு மிலமே பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
|
- சிறைக்குடி யாந்தையார். |
முடிபு: மேனி நறுந்தண்ணியள்; தோள் மணத்தலும் தணத்தலும் இலம்; பிரியின் வாழ்தல் அதனினும் இலம்.
கருத்து: தலைவியைப் பிரிதல் அரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 166 | 167 | 168 | 169 | 170 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 168. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, பிரியின், குறுந்தொகை, கூற்று, மேனி, வாழ்தல், இலம், அதனினும், சங்க, எட்டுத்தொகை