முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 163. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.)
யாரணங் குற்றனை கடலே பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத் தாழை திரையலை நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. |
5 |
- அம்மூவனார். |
முடிபு: கடலே, கங்குலும் நின்குரல் கேட்கும்; யார் அணங்குற்றனை?
கருத்து: கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 161 | 162 | 163 | 164 | 165 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், கடலே, தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, வருத்த, யார், சங்க, எட்டுத்தொகை, யாரால்