முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 160. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 160. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை வரைந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி வரைந்து கொள்வது யாங்ஙனம்?” என்று கவன்று கூறியது.)
நெருப்பி னன்ன செந்தலை யன்றில் இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார் |
5 |
இதோ தோழிநங் காதலர் வரவே. | |
- மதுரை மருதனிள நாகனார். |
முடிபு: தோழி, வாடையும் வாரார்; காதலர் வரைவு இஃதோ?
கருத்து: தலைவர் இன்னும் வந்திலர்; வரைவரெனக் கருதுதல் எங்ஙனம்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 158 | 159 | 160 | 161 | 162 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 160. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, தலைவர், தலைவி, கூற்று, குறுந்தொகை, வாடையும், வாரார், காதலர், னன்ன, “அவர், எட்டுத்தொகை, சங்க, வரைந்து, வந்தாரிலர், கொள்வது