முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 16. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 16. பாலை - தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
உள்ளார் கொல்லோ தோழி கள்வர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி தன்றுணை பயிரும் அங்காற் கள்ளியங் காடிறந் தாரே. |
5 |
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
முடிபு: தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?
கருத்து: தலைவர் விரைவில் வந்து விடுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 16. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, உடைய, குறுந்தொகை, கூற்று, கள்வர், பல்லியை, தலைவர், பெண், நம்மை, எட்டுத்தொகை, சங்க, சென்ற, பல்லி