முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 131. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 131. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போலப் |
5 |
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே. | |
- ஒரேருழவனார். |
முடிபு: கண்ணி இருந்த ஊர் நெடுஞ்சேணாரிடையது; நெஞ்சு பெருவிதுப்புற்றன்று; யான் நோகு.
கருத்து: யான் கூறிவந்த பருவம் வந்தமையின் என் நெஞ்சம் தலைவியை அடைய அவாவுகின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 129 | 130 | 131 | 132 | 133 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 131. பாலை - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, பெரிய, இருந்த, யான், ஈரம், உள்ளது, எட்டுத்தொகை, சங்க, நெஞ்சம், கண்ணி