முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 128. நெய்தல் - தலைவன் கூற்று
குறுந்தொகை - 128. நெய்தல் - தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைக் குறியிடத்திற் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்டற் கரியள்; நீ துன்புறற்குரியை” என்று கூறியது.)
குணகடல் திரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச் சேயல் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. |
5 |
- பரணர். |
முடிபு: நெஞ்சே, அரியோட் படர்தி; நோயை; நோய்ப்பாலோய்.
கருத்து: இனித் தலைவி நாம் பெறற்கரியள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 128. நெய்தல் - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நெய்தல், நெஞ்சே, கூற்று, குறுந்தொகை, அரியோட், படர்தி, நோயை, அயிரை, தலைவி, எட்டுத்தொகை, சங்க, நாரை, தொண்டி