முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 115. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 115. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு புலவி தீர அளிமதி இலைகவர் பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சும் |
5 |
நன்மலை நாட நின்னல திலளே. | |
- கபிலர். |
முடிபு: மலைநாட, பெருநன்று ஆற்றிற் பேணாரும் உளரே? ஒரு நன்று உடையள் ஆயினும் அளிமதி; நின்னலதிலள்.
கருத்து: இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 115. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, ஆயினும், அளிமதி, மரையா, உளரே, அன்பு, எட்டுத்தொகை, சங்க, வைத்துப், பேணாரும்