முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 113. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 113. மருதம் - தோழி கூற்று
(பகற்குறியின்கண் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று ஆண்டு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.)
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும் துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் |
5 |
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. | |
- மாதீர்த்தனார். |
முடிபு: பொய்கை ஊர்க்கும் அணித்து; யாறு சேய்த்து மன்று; பொழில் யாவதுந் துன்னல் போகின்றது; யாம் சேறும்; பெரும்பேதை ஆண்டும் வருகுவள்.
கருத்து: பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு அளவளாவலாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 113. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பொய்கை, கூற்று, குறுந்தொகை, மருதம், சேறும், ஆண்டும், வருகுவள், கரையிலுள்ள, எட்டுத்தொகை, சங்க, ஊர்க்கும்