முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 112. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 112. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, “நான் ஊரார் அலருக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்; என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லேன்” என்று கூறித் தலைவி வருந்தியது.)
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ நாருடை ஒசியல் அற்றே கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. |
5 |
- ஆலத்தூர் கிழார். |
முடிபு: தோழி, கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்; விடின் நாணே உள்ளது; அவர் உண்ட நலன ஒசியலற்று; கண்டிசின்.
கருத்து: ஊரார் அலரை அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 110 | 111 | 112 | 113 | 114 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 112. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், காமம், தலைவி, கூற்று, குறிஞ்சி, குறுந்தொகை, கண்டிசின், நாணே, விடின், பிறர், தோழி, கௌவை, எட்டுத்தொகை, சங்க, ஊரார், எய்க்கும், உள்ளது