முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 111. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 111. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் |
5 |
வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே. |
|
- தீன்மதி நாகனார். |
முடிபு: தோழி, செல்லலை வேலன் நெடுவேளென்னும்; அன்னையும் அதுவென உணருமாயின், மலைநாடன் காணிய சிறிது வல்லே வருக.
கருத்து: தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 111. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, தலைவன், இலக்கியங்கள், குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, வேறுபாடு, வருக, வல்லே, காணிய, சிறிது, பெரிய, நின், அதுவென, தாய், சங்க, எட்டுத்தொகை, கண்டு, இங்கே, வேலன், வந்து, அன்னையும்