முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 105. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் கேண்மை வரைவினால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை |
5 |
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. | |
- நக்கீரர். |
முடிபு: மலைநாடன் கேண்மை நினைப்பாகின்றது.
கருத்து: தலைவன் வரையாமையின் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கேண்மை, கூற்று, நினைந்து, எட்டுத்தொகை, சங்க, தலைவன்