முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 101. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குற் குறுமகள் |
5 |
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. | |
- பரூஉ மோவாய்ப் பதுமனார். |
முடிபு: எமக்கு, குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு, கடல் வளைஇய உலகமும் புத்தேணாடும் ஆகிய இரண்டும் தூக்கிற் சீர் சாலா.
கருத்து: தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், இரண்டும், குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பெறுதற்கரிய, இன்பமும், தோள், எமக்கு, கடல், ஆகிய, உலகமும், எட்டுத்தொகை, சங்க, வளைஇய, தூக்கிற், குறுமகள்