முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 100. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 100. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “யான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும் காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற் கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
5 |
பாவையின் மடவந் தனளே மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. |
|
- கபிலர். |
முடிபு: நான் கண்டு காமுற்ற மகள் மடவந்தனள்: அவள் தோள் மணத்தற்கரிய.
கருத்து: என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 100. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, காமுற்ற, கண்டு, மகள், சங்க, எட்டுத்தொகை, அவள், நான்