கலித்தொகை - மருதக் கலி 91
அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் இன்று நன்று, என்னை அணி; | 5 |
அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை தெய்வத்தான் கண்டீ தெளிக்கு; மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார் செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் | 10 |
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி; | 15 |
தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து; அன்னதேல், ஆற்றல் காண் வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின், மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் | 20 |
கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய், பேணாய் நீ பெட்பச் செயல். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், இன்மை, தீது, தாரும்