கலித்தொகை - குறிஞ்சிக் கலி 43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற | 5 |
மை படு சென்னிப் பய மலை நாடனை, தையலாய்! பாடுவாம், நாம்; தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின், கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் | 10 |
தோற்றலை நாணாதோன் குன்று; வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவிய வள மலை நாடனைத் தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை; | 15 |
நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று; புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட | 20 |
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை; கடுங் கண் உழுவை அடி போல வாழைக் கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் | 25 |
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், தன் மெய் துறப்பான் மலை; என ஆங்கு, கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு வாடிய மென் தோளும் வீங்கின | 30 |
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புணர், எழில், பாடித்தை, ஒன்று, நாடனை, குன்று, பொறி