கலித்தொகை - பாலைக் கலி - 4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்- சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், | 5 |
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி; 'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் | 10 |
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும் 'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என் ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் | 15 |
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும் 'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என் ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; | 20 |
எனவாங்கு, 'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர், பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அறியேன், என்னும், எவன்கொல், மற்று, அமையார், காதலர், தோழி, அவர், பொருள்