கலித்தொகை - நெய்தற் கலி 122
'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற, போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப, காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி, சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; | 5 |
அலவலை உடையை' என்றி தோழீ! கேள், இனி: மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன் காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் | 10 |
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்; இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன் தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், அருளி அவன் சிறிது அளித்தக்கால், என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்; | 15 |
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன் உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என் அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்; அதனால், | 20 |
யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த காம நோயின் கழீஇய நெஞ்சம் தான் அவர்பால் பட்டதாயின், நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவன், நெஞ்சம், அறியினும், அறிவேன்மன், அளித்தக்கால், காண்பல், ஆதல், சிறிது, இலன், மகளிரோடு, அமைந்து, பண்பு, செய்து, மாதர், எழில்