கலித்தொகை - பாலைக் கலி - 12
இடு முள் நெடு வேலி போல, கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி, உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, | 5 |
வெறி நிரை வேறாகச் சாரச்சாரல் ஓடி, நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்! உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய | 10 |
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! இளமையும் காமமும் நின் பாணி நில்லா இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை | 15 |
போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்! கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாள், பொருள், பொருள்வயிற்