கலித்தொகை - முல்லைக் கலி 116
பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம் தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ என்னை ஏமுற்றாய் விடு; விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் | 5 |
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில் நீங்கி, சினவுவாய் மற்று; நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு, வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு; யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் | 10 |
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான், நீ அருளி நல்கப் பெறின்; நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ' கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம் மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! | 15 |
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும் வருவையான் நாண்இலி! நீ |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வருக, யான், மற்று, எதிர்