அகநானூறு - 94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, வான் எனப் பூத்த பானாட் கங்குல், மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
5 |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், ஐது படு கொள்ளி அங்கை காய, குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
10 |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல், இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலைமகன், சிறு, முல்லை