அகநானூறு - 91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, பாசி தின்ற பைங் கண் யானை |
5 |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
10 |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, பசி என அறியாப் பணை பயில் இருக்கை, தட மருப்பு எருமை தாமரை முனையின், |
15 |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், குடநாடு பெறினும் தவிரலர் மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி