அகநானூறு - 83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, கறை அடி மடப் பிடி கானத்து அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
5 |
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
10 |
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, எய்த வந்தனவால்தாமே நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சுரி