அகநானூறு - 78. குறிஞ்சி
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
5 |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், தேம் பிழி நறவின் குறவர் முன்றில், முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
10 |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
15 |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
20 |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, கடும் பரிப் புரவிக் கை வண் பாரி தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
25 |
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மலர், தேம்