அகநானூறு - 72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
5 |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
10 |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
15 |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
20 |
ஆனா அரும் படர் செய்த யானே, தோழி! தவறு உடையேனே. |
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, தவறு