அகநானூறு - 66. மருதம்
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, |
5 |
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! |
10 |
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர் தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது, மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் |
15 |
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு தானே புகுதந்தோனே; யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற் கஇலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று |
20 |
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய பழங் கணோட்டமும் நலிய, |
25 |
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே |
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தளர்பு, ஆகுதல்