அகநானூறு - 44. முல்லை
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; முரண் செறிந்திருந்த தானை இரண்டும் ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
5 |
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
10 |
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, கண்டது நோனானாகி, திண் தேர்க் கணையன் அகப்பட, கழுமலம் தந்த பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
15 |
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, தண் குடவாயில் அன்னோள் பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வினை, அருங்