அகநானூறு - 40. நெய்தல்
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர, அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
5 |
தாழை தளரத் தூக்கி, மாலை அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய, துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
10 |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, வாரற்கதில்ல தோழி! கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
15 |
அகமடல் சேக்கும் துறைவன் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -