அகநானூறு - 391. பாலை
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய நுண் கொடி அதிரல் மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
5 |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் தோழி! இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
10 |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை குன்று புகு பாம்பின் தோன்றும், என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 389 | 390 | 391 | 392 | 393 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -