அகநானூறு - 385. பாலை
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் என் ஓரன்ன தாயரும், காண, கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தை அன்ன பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
5 |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
10 |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
15 |
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 383 | 384 | 385 | 386 | 387 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நெடு, மயில், ஓரன்ன