அகநானூறு - 383. பாலை
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, காடும் கானமும் அவனொடு துணிந்து, நாடும் தேயமும் நனி பல இறந்த சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, |
5 |
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய, வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, |
10 |
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி, பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும், ஆர நீர் ஊட்டிப் புரப்போர் யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 381 | 382 | 383 | 384 | 385 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தாய், நீர்