அகநானூறு - 369. பாலை
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் சேயிழை மகளிர் ஆயமும் அயரா; |
5 |
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன், கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்! |
10 |
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு, எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக் கடல்அம் தானை கை வண் சோழர், கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, |
15 |
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை, மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த |
20 |
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, 'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, |
25 |
மேயினள்கொல்?' என நோவல் யானே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 367 | 368 | 369 | 370 | 371 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புனைந்து, காழ்