அகநானூறு - 363. பாலை
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
5 |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
10 |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளை தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
15 |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, எய்த வந்தனரே தோழி! மை எழில் துணை ஏர் எதிர் மலர் உண்கண் பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 361 | 362 | 363 | 364 | 365 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, செய், அதர்