அகநானூறு - 362. குறிஞ்சி
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
5 |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, நசை தர வந்த நன்னராளன் நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
10 |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் இலங்கு வெள் அருவி போலவும், நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
15 |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 360 | 361 | 362 | 363 | 364 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போலவும், தோழி