அகநானூறு - 358. குறிஞ்சி
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், காமர் பீலி, ஆய் மயில் தோகை இன் தீம் குரல துவன்றி, மென் சீர் ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
5 |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
10 |
என் என உரைக்கோ யானே துன்னிய பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, ஓடை யானை உயர் மிசை எடுத்த ஆடு கொடி கடுப்ப, தோன்றும் கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
15 |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 356 | 357 | 358 | 359 | 360 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உயர், நிறம்