அகநானூறு - 336. மருதம்
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
5 |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
10 |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் ஏசுப என்ப, என் நலனே; அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே; தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
15 |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியானாயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
20 |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, ஆரியர் படையின் உடைக, என் நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 334 | 335 | 336 | 337 | 338 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நேர், மகளிர், துறை