அகநானூறு - 332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
5 |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின் புரை தக்க சாயலன் என, நீ |
10 |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
15 |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 330 | 331 | 332 | 333 | 334 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -