அகநானூறு - 33. பாலை
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, "மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
5 |
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
10 |
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, யாமே எமியம் ஆக, நீயே ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
15 |
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின், எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
20 |
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -