அகநானூறு - 328. குறிஞ்சி
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, அரவின் பைந் தலை இடறி, பானாள் இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
5 |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
10 |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, கழை தின் யாக்கை விழை களிறு தைவர, வாழை அம் சிலம்பில் துஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே! |
15 |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 326 | 327 | 328 | 329 | 330 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிலம்பில், தோழி, முயங்குதொறும்