அகநானூறு - 327. பாலை
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல, வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
5 |
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! நீ செல வலித்தனைஆயின், யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் ஆவி அவ் வரி நீர் என நசைஇ, மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
10 |
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
15 |
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், கோல் கழிபு இரங்கும் அதர, வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 325 | 326 | 327 | 328 | 329 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாத்த, நீர், வேறு