அகநானூறு - 326. மருதம்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் கடுந் தேர் குழித்த ஞௌளல் ஆங்கண், நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
5 |
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
10 |
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஓக்கிய வேல் போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 324 | 325 | 326 | 327 | 328 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வேல், வாயில்