அகநானூறு - 320. நெய்தல்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
5 |
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
10 |
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் வண்டற் பாவை சிதைய வந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை, சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 318 | 319 | 320 | 321 | 322 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி