அகநானூறு - 308. குறிஞ்சி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் ஆலி அழி துளி பொழிந்த வைகறை, வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
5 |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! இரவின் வருதல் எவனோ? பகல் வரின், தொலையா வேலின் வண் மகிழ் எந்தை களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
10 |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
15 |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 306 | 307 | 308 | 309 | 310 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பகல், குறிஞ்சி