அகநானூறு - 306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
5 |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, பழன யாமை பசு வெயில் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
10 |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து எம் மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
15 |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 304 | 305 | 306 | 307 | 308 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மறுகின்