அகநானூறு - 303. பாலை
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, பேஎய் கண்ட கனவின், பல் மாண் நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
5 |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
10 |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
15 |
ஐயம் தௌயரோ, நீயே; பல உடன் வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
20 |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - அவ்வையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 301 | 302 | 303 | 304 | 305 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிரை