அகநானூறு - 300. நெய்தல்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், பறி கொள் கொள்ளையர், மறுக உக்க மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
5 |
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, 'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச் சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
10 |
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், சேணின் வருநர் போலப் பேணா, இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
15 |
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
20 |
இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 298 | 299 | 300 | 301 | 302 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போலப்