அகநானூறு - 297. பாலை
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
5 |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
10 |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், எழுதியன்ன கொடி படு வெருகின் பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
15 |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் வெரு வரு கானம், நம்மொடு, 'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 295 | 296 | 297 | 298 | 299 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மறவர், புன், பெரும்