அகநானூறு - 292.குறிஞ்சி
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
5 |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, இரவின் மேயல் மரூஉம் யானைக் கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
10 |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் உடு உறு கணையின் போகி, சாரல் வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு நாடன் மணவாக்காலே! |
15 |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வெறி, சிறு