அகநானூறு - 289. பாலை
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
5 |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
10 |
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, மை அற விரிந்த படை அமை சேக்கை ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
15 |
'நல்ல கூறு' என நடுங்கி, புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 287 | 288 | 289 | 290 | 291 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மென்