அகநானூறு - 278. குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம் பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு, கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி, உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், |
5 |
பெரு மலை மீமிசை முற்றினஆயின், வாள் இலங்கு அருவி தாஅய், நாளை, இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி வருவதுமாதோ, வண் பரி உந்தி, நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை; |
10 |
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள் முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய, தணிவு அருந் துயரம் செய்தோன் அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே? |
15 |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பானாள்