அகநானூறு - 277. பாலை
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் பகல் அழி தோற்றம் போல, பையென நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
5 |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
10 |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் வாரா அளவை ஆயிழை! கூர் வாய் அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
15 |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் வந்தன்று அம்ம, தானே; வாரார் தோழி! நம் காதலோரே. |
20 |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 275 | 276 | 277 | 278 | 279 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அழல், மயிர்